பாட்டாளி மக்கள் கட்சியின் 38-வது தொடக்க விழா நேற்று (ஜுலை.16) சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய அன்புமணி, ” ஐந்தாண்டு காலம் சென்னையை நாசமாக்கிவிட்டார்கள்.
சின்னாபின்னமாக்கி விட்டார்கள். அதற்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒருவர்தான் காரணம். இப்போது அதற்காக அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

சேகர்பாபு என்ன பெரிய எக்ஸ்பெர்ட்டா. அவர் ஆளுமை மிக்கவரா? அவருக்கு அந்தத் துறை இந்தத் துறை என்று ஒதுக்கினார்கள். சென்னைக்கு எவ்வளவு செய்திருக்கலாம்.
இதில் சென்னைக்கு மேயர் வேறு இருக்கிறார். சென்னை மேயருக்கு அவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய 4 பெரிய மாநகராட்சிகளில் சென்னையும் ஒன்று.