மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க மட்டுமே அனுமதித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் முறையான அனுமதி இன்றி கர்நாடக அரசால் எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் பலதரப்பட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகளை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு வேலை தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன், வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்துச் சட்டப்பூர்வமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் பலனடையும் வகையில் அந்த நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.” என்றார்.