துலாம்:
தற்போதைய நிலைப்படி இந்த ராசியினருக்குச் சனி சாதகமாகவே சஞ்சரிக்கிறார். அதேபோல் 6-ம் இடத்து அதிபதியான குருபகவானும் ஓரளவு சாதக பலன்களையே அளிப்பார். ஆகவே, இவர்களுக்கு நடப்பு காலம் கடன்கள் அடைபடும் காலமாக இருக்கும். எனினும் சிறியளவில் சிரமங்கள் உண்டாகும். உறவுகளுக்கு உடல்நிலை பாதிப்புகள், பயணங்கள் போன்றவற்றால் செலவுகள் வரும்; சமாளித்து மீள்வார்கள். ஒருவேளை கடன் வாங்கும் சூழல் உண்டானாலும் அளவுடன் வாங்குவது நல்லது. வியாழன்று தட்சிணாமூர்த்தி பகவானை வணங்கி, கொண்டைக்கடலை தானம் செய்யுங்கள்; பணப் பிரச்னைகள் தீரும்.
விருச்சிகம்:
இவர்களுக்கு ராசிபதி செவ்வாய்; 6-ம் இடத்து அதிபதியும் அவரே. ஆக எதன் மூலம் வருமானம் வருகிறதோ, அதன் மூலமாகவே கடனும் உண்டாகும். தொழில் மூலம் வருமானம் வருகிறது எனில், அந்தத் தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்க நேரிடலாம். அதேபோல், சிற்சில தேவையில்லாத வீண் செலவுகளாலும் கடனுக்கு ஆளாகலாம். திட்டமிட்டுச் செயல்பட் டால் கடனைத் தவிர்க்க முடியும். ஜென்ம ஜாதகப்படியான தோஷங்களால் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் நிலை எனில், அம்பாளைச் சரணடையுங்கள். குறிப்பாக துர்கை அம்மனுக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு. முடிந்தால் உழவாரப் பணிகளில் கலந்துகொள்ளுங்கள்; வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
தனுசு:
இந்த ராசியினருக்கு 6-ம் இடம் சுக்ரபகவானுக்கு உரியது. நடப்புக் காலத்தில் கடன்கள் அடைபட வாய்ப்பு உண்டு. எனினும் 4-ம் இடத்தில் உள்ள சனி பகவான் செலவுகளைக் கொடுப்பார். பழைய வீடு, தொழில் ஸ்தானங்களைப் பராமரித்தல், பூர்விகச் சொத்துக்கள் வழியில் கடன்கள் உண்டாகலாம். இவர்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பெருமாள் கோயில்களுக்குச் என்று தாயாரை வணங்கி வருவதால் செல்வ விருத்தி உண்டாகும்.
மகரம்:
இவர்களுக்கு ராசியிலிருந்து 7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். ராகு, கேதுக்களின் சஞ்சாரமும் சாதகம் இல்லை. இவர்கள், உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நவகிரக சந்நிதியில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். இயன்றால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வழிபடுவது விசேஷம்.
கும்பம்:
இந்த ராசியினருக்கு 2-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். அவரின் 8-ம்பார்வை நிலை சாதகம் இல்லை. ஆகவே, சிற்சில பாதிப்புகள் உண்டாகும். முதலீடுகளீல் கவனம் தேவை. பேராசையால் அனுபவம் இல்லாத விஷயங்களில் இறங்கக் கூடாது. மீறினால் இழப்புகள் விரயங்கள் உண்டாகலாம். இந்த ராசியினர் சோமவாரமாகிய திங்கள் கிழமைகளில், வில்வம் சமர்ப்பித்து சிவ தரிசனம் செய்வது நல்லது.
மீனம்:
இவர்களுக்கு ஜென்மச் சனி நடைபெற்று வருகிறது. கடன் வாங்கும் விஷயத்தில் அதீத கவனம் தேவை. வாக்கு கொடுப்பது, மற்றவருக்காக ஜாமீன் கொடுப்பது கூடவே கூடாது. சிலருக்குப் பழைய கடன்களால், இப்போது சில பிரச்னைகள் தலைதூக்கலாம். வட்டிக்கு வட்டி சேரும் நிலை உண்டாக வாய்ப்பு உண்டு. எனவே வங்கி லோன், நகைக்கடன் போன்ற விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னெச்சரிக்கையோடு இருப்பது சிறப்பு. இவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். பெளர்ணமி நாளில் அபிராமி அந்தாதி படித்து, சர்க்க ரைப் பொங்கல் நிவேதித்து, தாமரை மலர் சமர்ப்பித்து அம்பாளை வழிபடுவதன் மூலம் பாதிப்புகளில் இருந்து மீளலாம்.