தி.மு.க பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், இன்றைய தினம் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே, `உங்களின் குரலாக ஒரு மடல்’ என்ற தலைப்பில் தனது தொகுதியிலுள்ள ஊராட்சிகள் ஒவ்வொன்றிலும் பெறப்பட்ட கோரிக்கைகளை தொகுத்து, அதை கடிதமாக தயார் செய்து, வீடுதோறும் சென்றடையச் செய்திருக்கிறார் துரைமுருகன்.

அதில், “எனதருமை ஊராட்சி மக்களே! உங்களின் சேவகனாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறேன். உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிசார்ந்து கீழ்காணும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் மட்டுமல்லாது, உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்து, நீங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் தொடரவுள்ள திராவிட மாடல் 2.O ஆட்சியில் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார் துரைமுருகன்.