சின்ன தீப்பொறியை தூண்டிவிட்ட இங்கிலாந்து! காட்டுத்தீயாக மாறிய மெஸ்ஸி! அர்ஜென்டினா வெல்ல காரணமே இதான் | How Bellingham fight created the fire inside Messi and Argentina in England match

Spread the love

Sports

oi-Shyamsundar I

நியூயார்க்: இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான நேற்று நடந்த கால்பந்து உலகக்கோப்பை செமி பைனல் ஆட்டத்தில், இங்கிலாந்தின் இளம் வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் அர்ஜென்டினா லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட ஒரு ஆக்ரோஷமான மோதல் தான் ஒட்டுமொத்த போட்டியின் தலையெழுத்தையே மாற்றியமைத்தது.

அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடந்த 2026 ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வென்றது.

போட்டியை மாற்றியமைத்த அந்த மோதல்

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டம் மிகவும் ஆக்ரோஷமாகவும், உடல் ரீதியான மோதல்கள் நிறைந்ததாகவும் இருந்தது. கால்பந்தை அடிப்பதை விட மாறி மாறி வீரர்கள் காலில் அடித்துக்கொண்டதுதான் அதிகம் இருந்தது.

How Bellingham fight created the fire inside Messi and Argentina in England match

சண்டை உச்சம் அடைந்த நிலையில்.. அம்பயர் இஸ்மாயிலை வீரர்கள் சூழ்ந்து நின்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

தொடர்ந்து சண்டை நடந்த காரணத்தால் விரக்தியின் விளிம்பில் இருந்த ஜூட் பெல்லிங்ஹாம், லியோனல் மெஸ்ஸியை நோக்கி சில காரசாரமான வார்த்தைகளை வீசினார். இடை இடையே மானே தேனே என்று கெட்ட வார்த்தைகளையும் வீசினார்.

வழக்கமாக மைதானத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும் மெஸ்ஸி, இந்த முறை பின்வாங்கவில்லை. பெல்லிங்ஹாமின் முகத்திற்கு நேராக சென்று ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்தார்.

அங்கே இருந்த வீரர்கள் இருவரையும் பிரித்த போதிலும், மைதானத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. பெல்லிங்ஹாமின் இந்த சீண்டல், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியையும், ஒட்டுமொத்த அர்ஜென்டினா வீரர்களையும் மிகக் கடுமையான ஆக்ரோஷத்திற்கு கொண்டு சென்றது.

கடைசியில் பெல்லிங்ஹாம் எதோ சொல்ல மெஸ்ஸி பதில் சொல்லவே இல்லை.. ஓ அப்படியா என்று முகத்தை மாற்றினார். முகத்தை அப்படியே ஒரு பக்கமாக மாற்றி.. பார்த்துக்கொள்கிறேன் என்பது போல சைகை செய்தார். வெறும் சைகை மட்டுமே செய்தார்! இந்த ஒரு புள்ளி தான் இங்கிலாந்து அணி அர்ஜென்டினாவிற்கு எதிராக செய்த மிகப்பெரிய தவறாக அமைந்தது.

அர்ஜென்டினாவின் ஆக்ரோஷம்

இதன்பின் அர்ஜெண்டினா அணியின் ஆட்டம் தீவிரம் அடைந்தது. ஆனாலும் இரண்டாம் பாதியின் 55வது நிமிடத்தில் இங்கிலாந்தின் அந்தோணி கார்டன் ஒரு அற்புதமான கோல் அடித்து இங்கிலாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

அப்போது இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். ஆனால், மெஸ்ஸியின் மனதில் எரிந்து கொண்டிருந்த அந்த கோபம் தீரவில்லை. இங்கிலாந்து அணி தற்காப்பு ஆட்டத்திற்கு மாறிய வேளையில், அர்ஜென்டினா சிங்கத்தைப் போல ஆக்ரோஷமாக இங்கிலாந்தை தாக்கியது.

பெல்லிங்ஹாம் சண்டையால் வந்த அந்த கோபம், லியோனல் மெஸ்ஸியை ஒரு சாதாரண வீரராக போர் வீரராக மாற்றியது. ஒவ்வொரு அர்ஜென்டினா வீரரின் கால்களிலும் அந்த வேகம் தென்பட்டது.

மெஸ்ஸியின் மேஜிக்: அசாத்திய கம்பேக்

ஆட்டத்தின் 85வது நிமிடம் வரை இங்கிலாந்து வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அர்ஜென்டினாவின் வேகமான ஆட்டத்திற்கு அதற்கு மேல் இங்கிலாந்தால் இடம் கொடுக்க முடியவில்லை. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி என்சோ பெர்னாண்டஸ் அர்ஜென்டினாவின் முதல் கோலை அடித்தார். மைதானமே அதிர்ந்தது.

ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி நகரும் என்று அனைவரும் எதிர்பார்த்த 90வது நிமிடத்தில் மெஸ்ஸியின் அந்த வரலாற்று சிறப்புமிக்க மேஜிக் நிகழ்ந்தது. சரியாக கோல் அடிக்கும் வகையில் பந்தைப் பெற்ற மெஸ்ஸி, இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி, பெனால்டி பாக்ஸிற்குள் கிராஸை அனுப்பினார்.

அவருக்கு வாய்ப்பு இருந்தும் சக வீரர் லாடாரோ மார்டினெஸுக்கு பந்தை பாஸ் செய்தார். அவர் அதை தலையால் முட்டி கோலாக மாற்றினார். அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் அசாத்திய கம்பேக் கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஜூட் பெல்லிங்ஹாம் மெஸ்ஸியை சீண்டிய அந்த ஒரு நொடி, அர்ஜென்டினாவிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஆக்ரோஷத்தை தட்டி எழுப்பியது. அந்த ஆக்ரோஷமே அவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது. மெஸ்ஸியை வம்புக்கு இழுத்தால் என்ன நடக்கும் என்பதை இங்கிலாந்திற்கு அர்ஜென்டினா பாடம் புகட்டியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *