"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" – சி.வி.சண்முகம் தாக்கு

Spread the love

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

”அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர். ஆனால் இபிஎஸ் உணரவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்வி கிடைத்துள்ளது.

சீட்டுக்கட்டுகளைப் போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. கேள்வி எழுப்பியதற்காகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தற்போது யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.

தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஆமாம் சாமி போடுபவர்கள் மட்டுமே உள்ளனர்.

குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் பேச்சை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.

கட்சிக்காக உழைத்தவர்கள், பணத்தைச் செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர்.

வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை துரோகிகள் என்பதா? அதிமுக தலைமை சர்வாதிகாரப்போக்குடன் நடந்துகொண்டது.

திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று திட்டமிட்டப்போதே அதிமுக தனது சுயத்தை இழந்துவிட்டது.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகி ஆகிவிட்டாரா? பாமக கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் 7, 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது.

தொண்டர்களால் உருவான இயக்கம், தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

தனது மகனை அரசியலுக்குள் கொண்டுவருவதற்கு எடப்பாடி டிராமா செய்து கொண்டிருக்கிறார். கனவுலகத்தில் இருந்து இபிஎஸ் முதலில் வெளியே வரவேண்டும்.

கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை கூட்ட அஞ்சுவது ஏன்? செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *