டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.
தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து காக்ரோச் ஜனதா கட்சி தனது எக்ஸ் தளப் பதிவுகள்…
வாழ்க மாணவர் சக்தி!
—
வாழ்க மாணவர் ஒற்றுமை!
—
அமைதியான வழிகளாலும் இலக்கை அடைய முடியும்.
நான் காந்திஜியிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
—

புரட்சி வாழ்க!
—
இளைஞர்களின் அயராத போராட்டம் வீணாகாது என்று நான் முன்பே கூறியிருந்தேன்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.
—
கரப்பான் பூச்சிகள் வென்றன.. ஜனநாயகம் வென்றது!
—
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகள் குறித்த அப்டேட்:
1. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். – நடந்துவிட்டது.
2. தற்கொலை செய்துகொண்ட அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் – நிலுவையில் உள்ளது
3. மாணவர் போராட்டக்காரர்கள் எவர் மீதும் நடவடிக்கை இல்லை – நிலுவையில் உள்ளது.