தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை ஆந்திராவுக்கு மாற்ற முயற்சி; காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு?| Thoothukudi shipbuilding yard to Andhra Pradesh; is Chandrababu making strategic moves?

Spread the love

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரபல “HD Hyundai’ நிறுவனத்தின் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை ஆந்திர பிரதேசத்திற்கு மாற்ற அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்திய அரசுடன் கொண்டுள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆந்திராவின் காக்கிநாடா பகுதிக்கு ஈர்க்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறுவனத்தைக் கவரும் வகையில் ஆந்திர அரசு பல்வேறு கூடுதல் சலுகைகளையும், சிறப்புத் திட்டங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இந்தப் பிரமாண்ட திட்டம் தமிழ்நாட்டிற்கு வருவது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது ஆந்திராவின் இந்த நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த முக்கியமான திட்டத்தை தமிழ்நாட்டிலேயே தக்கவைக்க தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *