நம்பிக்கையும் யதார்த்தமும்: பாலேந்திர ஷா அரசின் 100 அம்சத் திட்ட முட்டுக்கட்டைகள் | Hope and Reality: Hurdles to Balendra Shah’s Government’s 100-Point Plan

Spread the love

உள்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமின்றி, அரசின் சில கொள்கை முடிவுகளும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கும் முடிவு, எல்லைப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் உலகளாவிய அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாளத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இது மக்களின் பொருளாதாரச் சுமையை அதிகரித்துள்ளது. மாணவர் சங்கங்களைக் கலைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

நேபால் பிரதமர் பாலன் ஷா

நேபால் பிரதமர் பாலன் ஷா

முந்தைய ஆட்சியை வீழ்த்திய இளைஞர் போராட்டங்களின் எழுச்சியில் உருவானதுதான் பாலேந்திர ஷாவின் அரசு. சுதன் குருங் போன்றவர்கள் அந்த மாற்றத்தின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்டனர். ஆனால், தற்போது தலைமைத்துவத்தின் உறுதித்தன்மை மற்றும் கொள்கை திசை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

வாக்குறுதிக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. உள்நாட்டு சர்ச்சைகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மக்கள் போராட்டங்கள் என அனைத்தும் ஒரே நேரத்தில் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பாலேந்திர ஷா தனது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையை எவ்வாறு மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இந்த ஆட்சியின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *