அந்தப் பேட்டியில் அவர், “சினிமா என்பது ஒரு வியாபாரம். ஒரு திரைப்பட இயக்குநராக எனது தொழிலை நேர்மையாகவும், உண்மையான ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் ஒன்றும் பெரிய படைப்பாளி கிடையாது. பல விஷயங்களிலிருந்து நான் ஈர்க்கப்படலாம், ஆனால் நமது கற்பனைத் திறனை எந்தளவுக்கு வேலையில் கொண்டு வருகிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.
வேறொரு படத்தை அப்படியே நகலெடுத்தால் அதில் படைப்பாற்றல் எங்கே இருக்கிறது? அதில் நாம் புதிதாக என்ன சேர்த்திருக்கிறோம்?
தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்துப் படம் எடுக்கும் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. செய்திகளில் வரும் மனிதர்களின் கதைகளை எடுத்துப் படமாக மாற்றுகிறேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.