அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் இன்று (மே.21) அமைச்சராக பதவியேற்றார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த தனபால் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எல்லோரையும் புறக்கணித்தார்கள், இன்று அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். என் மகன் தவெகவில் இணைந்து அமைச்சராகி விட்டார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல பதவிகளில் இருந்தவன். தற்போது என் மகன் அந்த இடத்திற்கு செல்வது பெருமையாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன்.
மனம் நொந்து அதிமுகவில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் சைக்கிளில் பிரச்சாரம் செய்து வளர்த்த கட்சி இன்று பிளவுப்பட்டிருப்பதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. நிறைய தவறு செய்தார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள்” என்று மனம் நொந்து பேசியிருக்கிறார்.