'நீங்களும் ஆகலாம் IAS' தஞ்சாவூரில் வழிகாட்டி நிகழ்ச்சி உங்களுக்காக! இலவசம்; ஆனால், முன்பதிவு அவசியம்

Spread the love

IAS, IPS – இந்த இரு பணிகள் மீதும் எப்போதும் இளைஞர்களுக்கு கனவு உண்டு.

ஆனால், அந்தக் கனவை UPSC பரிட்சையைத் தாண்டி, அடைந்துவிடுவது அவ்வளவு எளிது அல்ல.

UPSC பரிட்சையை கிராக் செய்வதற்கான சரியான வழிகாட்டுதல் நிச்சயம் வேண்டும்.

அப்படி வழிகாட்டும் பொறுப்பை தான் நாங்கள் எடுத்துக்கொண்டுள்ளோம்.

‘நீங்களும் ஆகலாம் IAS – UPSC/TNPSC வழிகாட்டி’ என்கிற தலைப்பில் ஆனந்த விகடனும், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமியும் இணைந்து வழிகாட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளோம்.

நீங்களும் ஆகலாம் IAS - UPSC/TNPSC வழிகாட்டி
நீங்களும் ஆகலாம் IAS – UPSC/TNPSC வழிகாட்டி

இந்தக் கருத்தரங்குடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப்பும் கிடைக்க உள்ளது.

என்ன வழிகாட்டுதல் வழங்கப்படும்?

‘UPSC/TNPSC தேர்வுக்கு படிக்க தொடங்குவது எப்படி?’ – முழுமையான திட்டம் மற்றும் வழிகாட்டுதலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கசம் ஐ.ஏ.எஸ், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமியின் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் ஆதில் பெய்க் ஆகியோர் பேச உள்ளனர்.

எங்கே… எப்போது?

மே 17, 2026-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

நேரம்: காலை 9 – பிற்பகல் 1.30 மணி.

கட்டணம் உண்டா?

இல்லவே இல்லை… இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய…

044-6680 2997 எண்ணுக்கு மிஸ்டுகால் (ஒருமுறை டயல் செய்தால் போதும்) கொடுங்கள்.

தொடர்புக்கு: 94442 27273

இணையதளம்:

Loading…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *