நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது | Nellai: Parents arrested for killing daughter who refused to give up illicit relationship

Spread the love

அவர் தற்கொலைசெய்து கொண்டதாக பெற்றோர்கள் உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

மூலைக்கரைப்பட்டி

மூலைக்கரைப்பட்டி

அமுதாவின் தாய், தந்தையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பலமுறை கூறியும், அமுதா தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அமுதாவின் கழுத்தை நெரித்தோம். சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்ந்தார்.

பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டோம் எனக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அமுதாவின் தாய், தந்தை இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *