தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடிதத்திலேயே இடம்பெற்றுள்ளன. நீங்களும் அதனைப் பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.
முதலமைச்சர் பதவிக்காக தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு எனது கவனத்திற்கு வரவில்லை. இரு கட்சிகளும் இணைவது அல்லது கூட்டணி வைப்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் மட்டுமே வந்தது.

அவ்வாறு கூட்டணி வைப்பார்களா என்பது குறித்து 1000 மில்லியன் கேள்விகள் உள்ளன. என் தனிப்பட்ட கருத்து என்ற முறையில் அதற்கு வாய்ப்பே இல்லை.” என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளது மற்றும் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “இந்த விவகாரத்தைக் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்குக் கண்டிப்பாகக் கொண்டு செல்வேன்” என்று உறுதியளித்தார். தொடர்ந்து பேசியவர், “அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றால் அது குறித்து விரிவாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.