புதிய தலைமைச் செயலகம்: “முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்” – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்! | Arunraj explanation regarding the construction in pattinapakkam

Spread the love

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப்பாக்கம் மக்களும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் அருண்ராஜ் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முயற்சி என்பது ஒருமுறை செலுத்தப்படும் மூலதனம்போல. அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நமது சட்டமன்றமும், அரசுத் துறைகளும் அனைத்து வசதிகளுடனும் இயங்கும் வகையில், ஒருங்கிணைந்த ஒரே கட்டடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

தற்போதைய செயலகக் கட்டடம், 300 ஆண்டுகள் பழைமையானது என்பதால் கடுமையான இடப்பற்றாக்குறை நிலவுகிறது. மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்க முடியாத சூழலும் உள்ளது. எனவேதான், அதிநவீனப் பசுமைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தக் கட்டடத் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் இதை வழக்கம்போலக் குற்றம்சாட்டினாலும், இது காலத்தின் தேவ கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *