மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு’ முன்னேறும் பாஜக – கையறு நிலை; காங்கிரஸ் சறுக்குவது எங்கே? | Congress is failing in getting the Rajya sabha seats conversion

Spread the love

உத்தர பிரதேசம்: சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் கட்சி மாறி பாஜகவிற்கு வாக்களித்தனர்.

மத்திய பிரதேசம்: ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகியபோது, அவரோடு சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறியதால் மாநிலங்களவை இடத்தைக் காங்கிரஸ் இழந்தது மட்டுமின்றி, ஆட்சியையும் பறிகொடுத்தது.

இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்குள் முறையான ஒழுங்குமுறை இல்லை என்பதையும், தங்களது சொந்த சட்டமன்ற உறுப்பினர்களையே அக்கட்சியால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

‘இந்தியா’ கூட்டணியின் எதிர்காலமும் நாடாளுமன்ற வியூகங்களும்

இந்த ஜார்கண்ட் தோல்வி என்பது வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தது மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த ‘இந்தியா’ கூட்டணியின் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு மீதே மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக அரசு சில முக்கியத் திட்டங்களை வைத்துள்ளது. நம்பகமான தகவல்களின்படி, வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு ‘மகளிர் இடஒதுக்கீடு’ மற்றும் ‘தொகுதி மறுவரையறை’  போன்ற முக்கிய மசோதாக்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இதில் சில மசோதாக்கள் அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் ஆகும்.இவற்றை நிறைவேற்ற வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு  பெரும்பான்மை அவசியமாகும்.

சுருக்கமாகக் கூறின், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எந்தவொரு மசோதாவையும் தடுக்க முடியாத அளவிற்கு, இத்தகைய மறைமுக ஆதரவு வாக்குகள் மூலம் பாஜக தனது பலத்தைத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

அமித் ஷா, மோடி

அமித் ஷா, மோடி

இறுதியாக, ஜார்கண்ட் தேர்தல் உணர்த்தும் பாடம் என்னவெனில், உள்கட்சி ஒற்றுமை இல்லாத பட்சத்தில் வெளிப்புறக் கூட்டணிகளால் பலன் ஏதுமில்லை என்பதாகும்.

காங்கிரஸ் கட்சிக்குள் ஒழுங்குமுறை தற்போதும் பலவீனமாக உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தங்களுக்குள்ளேயே ஒருமித்த கருத்து இல்லாத நிலையில், ‘இந்தியா’ கூட்டணியை வைத்துக்கொண்டு வரும் காலங்களில் பாஜகவை எவ்வாறு எதிர்க்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் தலைமை, மாநில வாரியாக உள்ள அரசியல் பலவீனங்களைக் கண்டறிந்து தங்களுக்குத் தேவையான ஆதரவைச் சத்தமின்றித் திரட்டி வருகிறது. காங்கிரஸும், ‘இந்தியா’ கூட்டணியும் தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ளத் தவறினால், வரும் காலங்களில் மேலும் பல மாநிலங்களில் இத்தகைய பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதே தற்போதைய அரசியல் சூழல் உணர்த்தும் உண்மையாகும்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *