இந்தியா என்பது 140 கோடி மக்கள் வாழும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நாகரிகம் கொண்டது.
கலாசாரம், மொழிகள், உணவு, மதம் என எல்லாவற்றிலும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசம். இந்தியாவைப் பாருங்கள், அது எவ்வளவு அழகானது என்று உங்களுக்கே தெரியும்.
உலகிலேயே மிகப்பெரிய நான்கு முக்கிய மதங்கள்—இந்து மதம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய மதம்—ஒரே நாட்டில் தோன்றியது என்றால் அது இந்தியாவில்தான்.
இந்த மதங்கள் இந்தியாவில் தோன்றி, அங்கேயே தொடர்ந்து தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன.
மறுபடியும் இந்தியாவைப் பாருங்கள்; உலகின் அனைத்து முக்கிய மதங்களும் இந்தியாவை நோக்கி வந்துள்ளன. யூத மதம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து வருகிறது.
இங்கிருக்கும் மற்ற மதங்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறது. உலகிலேயே யூத மக்கள் எந்தவிதமான ஒடுக்குமுறைக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ ஆளாகாத மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று—இதுதான் இந்தியாவின் அழகு.