வயதானாலும் வேகம் குறையலை.. ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த ‘மூத்த இந்திய வீரர்’ ரோகித் சர்மா! | Rohit Sharma: Age is Just a Number! Rohit Sharma Becomes the Oldest Indian to Score an ODI Fifty

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் விளாசியதன் மூலமாக புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அரைசதம் விளாசிய மிக வயதான வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் அந்த சாதனை மோகிந்தர் அமர்நாத் வசம் இருந்தது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 86 பந்துகளில் 110 ரன்களையும், ரோகித் சர்மா 69 பந்துகளில் 79 ரன்களையும் விளாசினர். இதன் மூலமாக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

Rohit Sharma

இந்த தொடர் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஏனென்றால் ஒருநாள் கேப்டனாக பொறுப்பேற்று சுப்மன் கில் வெல்லும் முதல் தொடராகும். இதனால் சுப்மன் கில்லும் பொறுப்புடன் விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அதேபோல் இந்த போட்டியில் ரோகித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை ரோஹித் சர்மா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சென்னையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், தனது வழக்கமான ‘ஹிட்மேன்’ பாணியில் அதிரடி காட்டி 48 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

வயதானாலும் தனது பேட்டிங் வேகம், டைமிங் மற்றும் சிக்ஸர் அடிக்கும் திறன் சற்றும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அமைந்திருந்தது. இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அரைசதம் விளாசிய மிக வயதான வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக மோகிந்தர் அமர்நாத் 39 வயது மற்றும் 36 நாட்களில் அரைசதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ரோகித் சர்மா 39 வயது மற்றும் 51 நாட்களில் அரைசதம் விளாசி முறியடித்துள்ளார். இதன் மூலமாக ரோகித் சர்மா அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு தாம் தயாராக இருக்கிறேன் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *