இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர்.
அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்து A டு Z தெரிந்துகொள்வது அவசியம்.

“முதலில் ஒரு நிதியாண்டில் அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை, “நான்’ எத்தனை நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன் என்பதைச் சரியாகக் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரே நிறுவனத்தில்தான் வேலைப் பார்த்திருக்கிறேன் என்றால், ஜூன் அல்லது ஜூலை வாக்கில் சம்பளம், கொடுப்பனவு (Allowance), வரி பிடித்தம் என அனைத்தையும் ஃபார்ம் 130-ல் குறிப்பிட்டு தருவார்கள்.
புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, ஃபார்ம் 16தான் இப்போது ஃபார்ம் 130 என்று அழைக்கப்படுகிறது.