விழுப்புரம்: 11 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; 62 வயது முதியவர் சிக்கிய பின்னணி என்ன?

Spread the love

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையொட்டி இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். 62 வயதாகும் இவர் மர வேலைகளைச் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை அழைத்து, அருகிலுள்ள கடையில் வடை வாங்கி வருமாறு கூறியிருக்கிறார்.

முதியவர் தெரிந்தவர் என்பதாலும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும், சிறுமியும் கடைக்குச் சென்று வடையை வாங்கி வந்திருக்கிறார். அப்போது சிறுமிக்கு ஒரு வடையைக் கொடுத்து அருகில் அமர வைத்திருக்கிறார். சிறிது நேரத்தில் முதியவர் கன்னியப்பன் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட முதியவர் கன்னியப்பன்
கைது செய்யப்பட்ட முதியவர் கன்னியப்பன்

அதையடுத்து அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிய சிறுமி, முதியவரின் பாலியல் தொல்லை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் முதியவர் கன்னியப்பனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாம.க தலைவர் அன்புமணி, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *