> இன்றிரவு (நேற்று) நடந்த சம்பவங்கள் ஆராயப்பட்டது. இந்த கட்டடம் போதிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும்.
இதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, ஆனால், இதனால்தான் வெள்ளை மாளிகையில் நாங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அவசியமாகின்றன.
அது – மிகப்பெரிய அறையாகவும், டிரோன் தாக்குதல்களைத் தாங்கும் திறன் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகளுடன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
> கடந்த இரண்டு ஆண்டுகளில், தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல. பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்… அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு புளோரிடாவின் பாம் பீச்சிலும் நடந்தது. அப்போதும் சட்ட அமலாக்கத் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டனர்.