₹20 லஞ்சம்… 30 ஆண்டுகள் நடந்த வழக்கு! – இறுதி விசாரணையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு! \ ₹20 Bribe Case: Supreme Court’s Verdict After 30-Year Legal Battle

Spread the love

குஜராத்தில் ₹20 லஞ்சம் தொடர்பாக 1996-ல் தொடங்கிய வழக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரசு அலுவலகத்தின் கிளார்க் (clerk) மற்றும் பியூன் (peon) ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது.

1996 பிப்ரவரியில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெச்சாரி கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மாணவர் ஒருவர் சென்றுள்ளார். கல்விச் சலுகைகளைப் பெறுவதற்காக அவருக்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate) தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சான்றிதழை வழங்குவதற்காக கிளார்க் ஒருவர் ₹120 லஞ்சம் கேட்டதாகவும், அதில் ₹100 கிளார்க்கிற்கும், ₹20 பியூனுக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர் Anti-Corruption Bureau (ACB)-யிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து ACB அதிகாரிகள், மாணவரிடம் அடையாளம் காணக்கூடிய வகையில் ₹120 பணம் கொடுத்து, அந்தப் பணத்தை அரசு ஊழியர்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

மாணவர் Income Certificate-ஐப் பெற்றார்.

அதன் பிறகு அவர் ₹20-ஐ Peon-க்கு கொடுத்தார்.

ACB அதிகாரிகள் சோதனை செய்தபோது, அந்த ₹20 பியூனிடமிருந்து மீட்கப்பட்டது.

ஆனால் ₹100 கிளார்க்கிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் கிளார்க், பியூன் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

இருவரும் மேல் முறையீடு செய்து வழக்கை நடத்தி வந்தனர்.

இறுதியாக உச்ச நீதிமன்றத்தை அடைந்தபோது, வழக்கில் பல முக்கியமான சந்தேகங்கள் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *