’16 வருச உழைப்புக்கு கிடைச்ச அங்கீகாரம்…’ – வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி! |”Recognition After 16 Years of Dedication”: Tamil Nadu Housing Board Chairman Siva Shares Emotional Moment

Spread the love

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என விஜய் முடிவெடுத்ததற்கும் அந்தத் தொகுதியின் வலுவான கட்டமைப்பிற்கும் முக்கியக் காரணமாக இருந்தது. வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தின் போதுமே சிவாவை மேடைக்கு அழைத்து, “எனக்காக இவர் தொகுதியை விட்டு கொடுத்திருக்காரு. இவரை நான் பார்த்துக்குறேன். கவலைப்படாதீங்க…” என விஜய் பேசியிருந்தார்.

பிரசாரத்தின்போது தவெகவின் பணிமனைக்கு விஜய் சென்றபோது அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், தொகுதியில் மக்களின் புகார்களை வாங்க சிவா எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றால் முதல்வர் விஜய்யின் குட்புக்கில் அவர் இடம்பிடித்திருந்தார்.

முதலமைச்சருடன் சிவா

முதலமைச்சருடன் சிவா

இதைத் தொடர்ந்தே சிவாவுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென முடிவெடுத்து வாரியத் தலைவர் பதவி கொடுக்க முதல்வர் விஜய் முன்வந்திருக்கிறார். அதுவும் இருப்பதிலேயே வலுவான அதிகாரமிக்க வீட்டு வசதி வாரியத் தலைவர் பதவியை சிவாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

முதல்வரைச் சந்தித்து நியமன ஆணையை வாங்கி வந்த சிவாவிடம் பேசினோம், “இப்போதுதான் தளபதியைச் சந்தித்துவிட்டு வருகிறேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. “உன்னை இப்படி ஒரு இடத்துல பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா… நீ மேன்மேலும் நிறைய உயரங்களை எட்டணும்’னு தோளில் தட்டி வாழ்த்தி அந்த நியமன ஆணையை தளபதி கொடுத்தார்.

16 வருடமாக மக்கள் இயக்கத்தில் உழைத்திருக்கிறேன். அந்த உழைப்புக்கு தளபதியே கொடுத்திருக்கும் அங்கீகாரம்தான் இது. முதல்வரின் சொல்படி இன்னும் அக்கறையோடு பொறுப்போடும் மக்களுக்காகப் பணியாற்றுவேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *