Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி ஒவ்வொரு போட்டியிலும் 8.2 கிமீ மட்டுமே ஓடி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரிலேயே 90 நிமிடங்கள் ஆடிய வீரர்களில் குறைந்தபட்சமாக ஓடி இருப்பது மெஸ்ஸி தான்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்6த்து அர்ஜென்டினா அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டிக்காக உலகமே காத்திருக்கிறது என்று சொல்லலாம். இப்படியான சூழலில் மெஸ்ஸியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் இந்த உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி மட்டும் 8 கோல்கள், 4 அசிஸ்ட்கள் செய்திருக்கிறார்.

39 வயதாகும் மெஸ்ஸி இன்னும் அர்ஜென்டினா அணி முக்கிய வீரராகவே வலம் வருகிறார். அதேபோல் வயதிற்கு ஏற்ப வேகம் குறைந்திருப்பதால், மெஸ்ஸி தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார். அந்த மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதாவது மொத்தமாக 33 முறை கோல் அடிக்க முயற்சித்துள்ளதோடு, 21 முறை கோல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்.
1986 உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்காக ஆடிய மரடோனாவுக்கு பின் இதுதான் அதிகபட்சமாகும். அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸி மைதானத்தில் கடந்த தூரத்தில் 47% நடந்தே சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் முழுமையாக ஆடியுள்ள வீரர்களில் சராசரியாக 12 கிமீ தூரம் வரை ஓடுகின்றனர்.
ஆனால் மெஸ்ஸியோ வெறும் 8.2 கிமீ மட்டுமே ஓடுகிறார். மீதமுள்ள நேரங்களில் நடந்துதான் மெஸ்ஸி அந்த இடத்திற்கு செல்கிறார். மெஸ்ஸி வயது முதிர்வு காரணமாக இப்படியான ஆட்ட முறைக்கு மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் நேரங்களில் தான் எதிரணியின் திட்டத்தையும், வீக்னஸையும் மெஸ்ஸியால் கண்டறிய முடிகிறது.
அதற்கேற்ப மாற்று திட்டங்களை மெஸ்ஸி உருவாக்கி வருகிறார். அர்ஜென்டினா அணி மெஸ்ஸியின் கண் அசைவுக்கு விளையாடுவது இதன் காரணமாகதான். இன்னும் மெஸ்ஸியை சுற்றில் அர்ஜென்டினா அணியின் அட்டாக் அமைக்கப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். இதனால் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.