Central Government to tap into LIC: Decision made to raise ₹35,000 crore by selling a 6.5% stake.-எல்.ஐ.சி.யில் கைவைக்கும் மத்திய அரசு: 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35000 கோடி திரட்ட முடிவு

Spread the love

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6.5 சதவீதத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பங்குகளை விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டு நாளை முடிவடைகிறது. ஆஃபர் ஃபார் சேல் (OFS) திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 கோடி ($3.7 பில்லியன்) மதிப்புள்ள 6.5% பங்குகளை விற்பனை செய்து வருகிறது.

ஒரு பங்கின் அடிப்படை விலையான ரூ. 382 என்ற விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால் மும்பை பங்குச்சந்தையில் எல்.ஐ.சி.யின் பங்குகள் ரூ. 424க்கு முடிவடைந்தது. மத்திய அரசு 10% தள்ளுபடி சலுகையில் இந்த பங்குகளை விற்று வருகிறது. இதன் மூலம் 6.5% பங்குகளை பங்குகளை முழுமையாக விற்றால், அரசுக்கு சுமார் 31,400 கோடி ரூபாய் கிடைக்கும். இது இந்தியாவில் பங்குகளை விலக்குவதற்கான மிகப்பெரிய OFS வாக கருதப்படுகிறது.

பொதுமக்கள்(சில்லறை விற்பனை) இன்று இத்திட்டத்தில் பங்குகளை வாங்க முடியாது. நாளை அதாவது கடைசி நாளில் பொதுமக்கள் பங்குகளை வாங்க முடியும்.

தற்போது 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அரசின் பங்கு விலக்கல் தற்போதைய ரூ.21,000 கோடியில் இருந்து ரூ.52,000 கோடியாக உயரும். மேலும், சொத்துப் பணமாக்கல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.6,367 கோடி கிடைக்க இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு அதன் முழு ஆண்டு இலக்கான ரூ.80,000 கோடியில் ரூ.60,000 கோடியை நெருங்கியிருக்கும். மே மாதம் எல்.ஐ.சி. நிறுவனம் ஒரு பங்கிற்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் போனஸ் வழங்கியது.

பங்கு விற்பனையானது, குறைந்தபட்ச பொது மக்களின்பங்கு விதிமுறையை பூர்த்தி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, ​​ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பொதுப் பங்கு 3.5% ஆக உள்ளது. தற்போது 6.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் பொது பங்கு 10% வரை உயரும். இது செபியின் விதிகளை பூர்த்தி செய்வதாக அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *