ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று ஏற்கெனவே சந்தை கணித்துவிட்டது. இதனால், அப்போதே இந்தத் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலித்துவிட்டது.
இதனால், அறிவிப்பு வெளியானதும், விலையில் பெரிய மாற்றம் நிகழவில்லை.
அடுத்ததாக மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்திருக்கின்றன. குறிப்பாகச் சீனாவின் வங்கிகள் 22-ஆவது மாதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.
உலக அளவில் போர்கள், நிலையற்ற தன்மை என்று இருந்து வருகிறது. இதனால், நாடுகளின் இறையாண்மை குறித்துக் கேள்வி எழுகிறது.
இன்னொரு பக்கம், நாடுகளின் கடன் சுமையும் கூடுகிறது.
இதனால், வட்டி தரும் வருமானங்களான பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இவையால் தங்கம் விலை குறையாமல் ஸ்டெடியாக வர்த்தகமாகி வருகிறது.