GT vs RCB: ‘நான் கனவிலும் இதை நினைக்கவில்லை, இந்த கோப்பை.!’ -ரஜத் பட்டிதர் நெகிழ்ச்சி |Rajat patidar post match speech after GT vs RCB final

Spread the love

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ரஜத் பட்டிதர்,” இந்த வெற்றி மிகவும் அற்புதம் வாய்ந்தது. நாங்கள் இந்த மைதானத்திற்கு வந்தபோதே கடந்த ஆண்டின் பல நினைவுகள் மனக்கண்ணில் வந்து போயின.

இப்போது என் மகிழ்ச்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை, அவ்வளவு நன்றாக உணர்கிறேன். எங்களிடம் மிகத் தெளிவான திட்டமிடல் இருந்தது. ஆர்சிபி அணியின் கேப்டனாகி, கோப்பையை உயர்த்துவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இது என் தலையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்று என்றுதான் நினைக்கிறேன், இதற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டவன்.

கடந்த ஆண்டை விட இந்த முறை நாங்கள் சற்று கூடுதல் நம்பிக்கையுடன் இருந்தோம். மைதானத்திற்குள் ரசிகர்கள் திரண்டு வந்த விதம், நாங்கள் எங்கு விளையாடினாலும் அது எங்களது சொந்த மைதானம் போன்ற உணர்வையே தந்தது.

இந்தத் தொடருக்கு முந்தைய எனது ஆயத்தங்கள் எனக்குப் பெரிதும் உதவின. எந்தெந்த ஷாட்டுகள் எனக்குச் சிறப்பாக வரும் என்பதை நானே பகுப்பாய்வு செய்து கொண்டேன்.

தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து எனக்குக் கிடைத்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன, அவர் எப்போதும் அணிக்காக முன்னிற்கக்கூடியவர். இந்த வெற்றி மீண்டும் உங்களுக்கானது ஆர்சிபி ரசிகர்களே! ஈ சாலா கப் நமதே,” என அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *