Law student hires contract killers to murder her own mother for a government job and property-அரசு வேலை, சொத்துக்கான சொந்த தாயை கூலிப்படை நியமித்து கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவி

Spread the love

போலீஸார் நடத்திய விசாரணையில், ஆயுஷியின் தந்தை நீதிமன்ற எழுத்தராகப் பணியாற்றினார். அவர் இறந்த பிறகு, அவரது அரசு வேலை கருணை அடிப்படையில் குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்பட இருந்தது. ஆயுஷி அந்த பாதுகாப்பான வேலையைத் தான் பெற விரும்பினார், ஆனால் அவரது தாய் நீரஜ் குடும்பத்தை நடத்துவதற்காக அந்த பணியில் சேர்ந்தார். சொத்து தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே கடும் தகராறு நீடித்து வந்தது.

எனவே தாயை கொலை செய்துவிட்டால் அரசு வேலை மற்றும் சொத்து கிடைக்கும் என்று கருதி இந்த கொலையை அரங்கேற்ற, ஆயுஷி தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப்பைப் பயன்படுத்திக் கொண்டார். மோகன் ஸ்வரூப்பிற்கு ஏற்கனவே நீரஜுடன் சொத்து தகராறு இருந்தது. இதனால் அவர்கள் இருவரும், உறவினர் பால்ராமுடன் சேர்ந்து, பாரத்பூரைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவன் ஹேமந்த் சர்மாவிடம் ₹7 லட்சம் கொடுத்து நீரஜைக் கொல்ல ஒப்பந்தம் செய்தனர். குற்றவாளிகள் 30 நாட்களாக நீரஜின் தினசரி வழக்கமான பாதைகள் மற்றும் நேரங்களைக் துல்லியமாகக் கணித்துத் திட்டமிட்டனர்.

`சொத்து, வேலைக்காக செய்தேன்”

காவல்துறையின் விசாரணையின் போது, அரசு வேலை கிடைக்காததால் தனக்கு ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தை ஆயுஷி ஒப்புக்கொண்டார். தனது தந்தையின் நீதிமன்ற வேலை தனக்கே சொந்தமானது என்றும், அதைத் தனது தாய் எடுத்துக் கொண்டதால் அவர் மீது தனக்குத் தீராத கோபம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

தனது தாயைக் கொன்றுவிட்டால், குடும்பச் சொத்துக்கள் அனைத்தும் தன் கைக்கு வந்துவிடும் என்றும், அதோடு அதே லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) அரசு வேலையைக் கருணை அடிப்படையில் தான் பெற்றுவிடலாம் என்றும் கணக்குப்போட்டு இந்த கொலையை அரங்கேற்றியதாகப் போலீசாரிடம் ஆயுஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *