இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில், விருதுநகர் நகராட்சியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.
நிகழ்வின் நிறைவில், “தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் மேடம்?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “எனக்கு தொண்டை சரியில்ல” எனச் சொல்லிக் கொண்டே வேகமாக நடந்து காரில் ஏறிக் கிளம்பிச் சென்றார்.

“சம்மந்தப்பட்ட துறை அமைச்சரே இப்படி பதில் சொல்வதா?” என, குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போட வந்த தாய்மார்கள் தங்களுக்குள் புலம்பிக் கொண்டனர். அமைச்சர் ஜெகதீஸ்வரியின் மழுப்பல் கலந்த அலட்சியமான இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.!