“ஆனால், தொகுதிவாரியாக சாதி பார்த்துதானே த.வெ.க வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்?”
“தமிழ்நாட்டில் கவுடர் சமுதாயத்தினருக்கு என்று இருந்த ஒரே தொகுதியான கம்பத்தில், இன்றைக்கு கவுடர் சமுதாயத்தைச் சாராத த.வெ.க வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கோவையில் வெற்றி பெற்றிருக்கிற அமைச்சர் சம்பத்குமார், 24 மனை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வெற்றிபெறவே முடியாது. அதிலும் கோவையில் அவர் வெற்றி பெற்றது ஆச்சரியமானது.
தியாகராய நகரில் வெற்றி பெற்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர் என்று தகவல். இப்படி தமிழ்நாடு முழுக்க த.வெ.க-வின் வெற்றி என்பது சாதியைத் துவம்சம் செய்து பெற்ற வெற்றி!”