`கருத்துக் கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை!' – செங்கோட்டையன்

Spread the love

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கருத்துக் கணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். தந்தி ஆன்லைன் கருத்துக் கணிப்பில் 2,50,808 பேரிடம் கருத்துக் கணிப்பு எடுத்து இருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில், 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள். மற்றவர்கள்  அதற்கு கீழே இருக்கும்  சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும் இலங்கை, நேபாள், வங்கதேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும் கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பிற்கும் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை. கருத்துக் கணிப்பு  என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது சால பொருத்தமாக இருக்கும். மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய நாட்டின் வரலாற்றில், பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சி, சோசலிச புரட்சி வரிசையில், வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது. 200 இடங்களில் வெற்றி பெறுவார், அவர் தான் தமிழ்நாட்டை ஆள்வார். இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. கருத்துக் கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்? யூடியூப்கள் தான் எடுத்துள்ளார்கள். டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *