காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
அச்சாலையின் அருகே குப்பைகள் அதிகம் வீசப்பட்டு அவ்விடம் குப்பைக் கிடங்கைப் போல் காட்சியளிக்கிறது.
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு சுத்தமாக இருந்த இடம் தற்போது குப்பை மேடாகவே மாறிவிட்டது.
அவ்வழியே செல்லும் மக்கள் எப்போதும் மூக்கை மூடிக்கொண்டு சென்ற நிலையிலேயே நடந்து செல்கின்றனர்.
அக்குப்பைக் கிடங்கின் அருகிலேயே கோவில், சிறப்புக் பராமரிப்பு மின் நிலையம், துணை மின் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார மையம் உள்ளன.

அவ்வலுவலக ஊழியர்கள், அவ்வலுவலகத்திற்குச் செல்லும் மக்கள், அவ்வழியே செல்லும் ஊர் மக்கள் என அனைவரும் கடக்க முடியாமல் அவ்விடத்தை மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்கிறார்கள்.