தமிழர்கள் கொலை:“தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ கண்டனம் கூட தெரிவிக்கவில்லை” – உதயநிதி ஸ்டாலின் | Killing of Tamils: “The Tamil Nadu government has not even expressed official condemnation” – Udhayanidhi Stalin.

Spread the love

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது.

அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்​துறை​யினர் நாட்டுத் துப்​பாக்​கியால் தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்படுகிறது.

இதில், ம‌ரியமங்​கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகத் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.

அதே நேரம் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்… எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *