கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்டு ஷாக்யா வனப்பகுதி உள்ளது.
அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில், மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக வனத்துறையினரின் இந்த அராஜக போக்கிற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாகத் தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் அறிவித்துள்ளார்.
அதே நேரம் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்… எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.