“பெண் பிள்ளையை ஏன் கிரிக்கெட்டுக்கு அனுப்புறீங்க?” – உலக சாதனை படைத்த தீப்தி சர்மாவின் பயணக்கதை!| Deepti Sharma becomes leading wicket-taker in women’s T20Is

Spread the love

உறவினர்கள் “படித்த பையன் ஏன் ஒரு பொண்ணு கிரிக்கெட்டுக்காக வேலையை விடணும்’ என்று விமர்சித்திருக்கின்றனர். அந்த 2 வருடங்கள் தான் தீப்தியின் முக்கியமான காலகட்டமாக இருந்திருக்கிறது.

ஆரம்பத்தில் மிதவேக பந்து வீச்சாளராக இருந்த தீப்தி சுமித் அறிவுரையை கேட்டு ஆஃப் ஸ்பின்னுக்கு மாறியிருக்கிறார். இதுவே அவருக்கு கேம் சேஞ்சார் ஆனது. 2014, சர்வதேச ஒரு நாள் போட்டியில் இந்தியாவில் இரண்டாவது சிறந்த பெண் பந்துவீச்சாளராக தீப்தி சர்மா தனது வெற்றிப் பயணத்தை தொடங்குகிறார்.

தீப்தி சர்மா

தீப்தி சர்மா

2016-ல் இலங்கைக்கு எதிராக 6/20 எடுத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய வரலாற்றிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

அதன்பிறகு, 2025 ODI உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காக்கு எதிராக 58 + 5/39 எடுத்து இந்தியாவின் முதல் மகளிர் உலக கோப்பை வெற்றிக்கு காரணமானார்.

தவிர அவர் தனது கல்வியையும் கைவிடவில்லை, ஆக்ரா கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார். அதைதொடர்ந்து, காவல்துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்ற தொடங்கினார். இன்று சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (171*) வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனைப் படைத்து, இளம் வீராங்கனைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.

வாழ்த்துகள் தீப்தி.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *