15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு – அதிர்ச்சி நிகழ்வுகள்! | The death of a young boy while playing in Bengaluru has caused sorrow.

Spread the love

இதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் போது உயிரிழந்தார். சஹாரா கிராமத்தைச் சேர்ந்த விராட் சிங் சவுகான் என்ற 6-ம் வகுப்பு மாணவன், ஞாயிற்றுக்கிழமை காலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளான். பந்துவீசிக்கொண்டிருந்தபோது கையில் கடுமையான வலிப்பதாகக் கூறிய அச்சிறுவன், நொடிப்பொழுதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தான்.

விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்

விளையாடும்போதே மரணமடைந்த சிறுவன்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்தனர். அச்சிறுவன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யக் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

சிறார்களின் இத்தகைய திடீர் உயிரிழப்புகள் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *