கப்பல் போக்குவரத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில், அக்கப்பலின் முதல் நிறுத்தம் நவம்பர் 11, 2025 அன்று பிரேசிலின் சாவ் விசென்டேவில் அமைந்திருந்ததாக கூறுகிறது. அதைத் தொடர்ந்த அடுத்து வந்த மாதங்களில், பனாமா கால்வாயில் நுழைவதற்கு முன்பு, அக்கப்பல் பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலுள்ள துறைமுகங்கள் வழியாகப் பயணித்தது. பின்னர், அக்கப்பல் பஹாமஸ், டொமினிக்கன் குடியரசு மற்றும் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பல்வேறு துறைமுகங்களுக்குப் பயணம் மேற்கொண்டது.
குறிப்பாக பிரேசில், பனாமா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள குறிப்பிட்ட துறைமுகங்களுக்கு இக்கப்பல் மீண்டும் மீண்டும் சென்று வந்தது. இதன் விளைவாக, இப்பயணத்தின் போது 40 முறை துறைமுகங்கள் மற்றும் இடங்களில் நின்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில், இக்கப்பல் தெற்காசியாவை நோக்கிப் பயணித்து, மே 19 அன்று நவி மும்பைக்கு அருகிலுள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை அடைந்தது.
பின்னர் மே 22 அன்று பாகிஸ்தானின் காசிம் துறைமுகத்திற்குச் சென்று, இறுதியாக மே 26 அன்று முந்த்ராவைச் சென்றடைந்தது. கடத்தல் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய மற்றொரு கப்பலுக்காக அந்தக் கப்பல் முந்த்ராவில் நங்கூரமிட்டு இரண்டு நாட்கள் நின்றது. கொக்கைன் நங்கூரமிட்டு இருந்த கப்பலில் இருந்து மற்றொரு படகிற்கு மாற்றப்பட இருந்தது. கப்பல் வரும் போது கொகைன் ஒவ்வொரு நாட்டிலும் இறக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று நம்புகிறோம்”‘என்று தெரிவித்தனர்.