நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.
மாணவர்களின் போராட்டத்திற்கும், கடுமையான எதிர்ப்பிற்கும் பிறகு இன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி உள்ளார்.
ஜந்தர் மந்தர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உருவாகியுள்ள சூழ்நிலையை நாட்டுக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். ஒரு மாணவரின் எதிர்காலமும் சட்ட சிக்கல்களில் சிக்கக் கூடாது. நமது மாணவர்கள் தங்களின் படிப்பிலும், எதிர்காலத் தொழில் வளர்ச்சியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த எண்ணத்தின் அடிப்படையில், நான் என் ராஜினாமா கடிதத்தை மாண்புமிகு பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.