பசிபிக் பெருங்கடலில் நீடித்த மேற்கத்திய காற்று குவிதல் மற்றும் ஜூலை மாதத்தில் உருவான பவி, டால்பின் போன்ற சூப்பர் புயல்கள் முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்திற்குள் பசிபிக் பெருங்கடலில் மூன்று சூப்பர் சூறாவளிகள் உருவாவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. இயல்பாக மேற்கு பசிபிக்கில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில்தான் சூப்பர் சூறாவளிகள் உருவாகும். இந்த ஆண்டும் அடுத்த மூன்று மாதங்களில் மேலும் மூன்று சூப்பர் சூறாவளிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அவை உருவாகும்போது, சூப்பர் எல் நினோ நவம்பர்–டிசம்பர் மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தீவிரமடையக்கூடும்.
இந்த தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கம் உலக அளவில் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் எதிரொலிக்கும். தற்போதே ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் அதிக வெப்பம், வெப்ப அலை, பருவமழை பற்றாக்குறை, காட்டுத்தீ, பெருமழை, வெள்ளப்பெருக்கு போன்ற சவாலான சூழல்கள் நிலவுகின்றன. இந்தியாவிலும் பல மாநிலங்களில் மழை பற்றாக்குறையும், சில மாநிலங்களில் பெருமழையும் நிகழ்ந்து வருகின்றன.
சூப்பர் எல் நினோ உருவானதன் காரணமாக ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்; மழைப்பொழிவின் தாக்கம் குறையும். உலகின் சராசரி வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2.0°C அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சுருக்கமாக, அக்டோபர் வரை வெப்பம், வெப்ப அலை மற்றும் வறட்சியும், நவம்பர்–டிசம்பரில் பெருமழையும், ஜனவரி முதல் அதிக வறட்சியும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.