இந்த அமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு, எண்ணெய் சந்தையை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் தான் கட்டுக்குள் வைத்திருந்தன.
அவை தான் எண்ணெய் உற்பத்தியையும், எண்ணெயின் விலையையும் முடிவு செய்து வந்தன.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் எண்ணெய் சந்தையை நிர்ணயிக்க வேண்டும் என்கிற கொள்கை அடிப்படையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் எண்ணெய் சந்தை இருக்கும் போது, அவர்கள் உற்பத்திக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியும்… எண்ணெய் சப்ளையை தொடர்ச்சியாக வைத்திருக்க முடியும் என முடிவு செய்யப்பட்டது.

எண்ணெய் சந்தையையும், எண்ணெய் உற்பத்தி நாடுகளையும் வரைமுறைப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய பணி.
மேலும், ஒவ்வொரு எண்ணெய் உற்பத்தி நாடும் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதையும் இந்த அமைப்பே முடிவு செய்யும்.
இதன் மூலம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ற உற்பத்தியும் நடக்கும். உலகத்திற்கு சரியான அளவிலான எண்ணெய் சப்ளையும் இருக்கும்.